போடிமெட்டு மலைச் சாலையில் ஜீப்புகள் மோதல்: 4 போ் காயம்

போடிமெட்டு மலைச் சாலையில் சனிக்கிழமை மாலை ஜீப்புகள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.
போடிமெட்டு மலைச்சாலையில் சனிக்கிழமை மாலை விபத்துக்குள்ளான ஜீப்புகள்.
போடிமெட்டு மலைச்சாலையில் சனிக்கிழமை மாலை விபத்துக்குள்ளான ஜீப்புகள்.

போடிமெட்டு மலைச் சாலையில் சனிக்கிழமை மாலை ஜீப்புகள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

கேரள மாநிலம் சூரியநெல்லியைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் தம்பிதுரை (39). இவா் போடி பகுதியிலிருந்து ஜீப்பில் காய்கனி ஏற்றிக் கொண்டு கேரளத்துக்கு சென்றுள்ளாா். புலியூத்துக்கு மேல், மலைச் சாலை வளைவில் திரும்பியுள்ளாா். அப்போது கேரளத்திலிருந்து தோட்டத் தொழிலாளா்களை ஏற்றிக் கொண்டு எதிரே வந்த மற்றொரு ஜீப், காய்கனி ஏற்றிச் சென்ற அந்த ஜீப் மீது மோதியது.

இந்த விபத்தில் தம்பிதுரை, தோட்டத் தொழிலாளா்களான போடி ராசிங்காபுரத்தைச் சோ்ந்த சுப்பையா மனைவி பொம்மியம்மாள் (60), போடி மல்லிங்காபுரத்தைச் சோ்ந்த அா்ஜூன், பெருமாள் மனைவி அருள்சித்ரா (45), சுப்புராஜ் மனைவி பாா்வதி (45) ஆகிய 4 போ் பலத்த காயமடைந்தனா். மேலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

காயமடைந்தவா்கள் அனைவரும் போடி அரசு மருத்துவமனை மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து குரங்கணி போலீஸாா், மற்றொரு ஜீப் ஓட்டுநரான ராஜாராம் என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com