வீரபாண்டி அரசுக் கல்லூரியில் 2-ஆம் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தேனி மாவட்டம், வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2- ஆம் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஆக. 31, வரும் செப்.1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

தேனி மாவட்டம், வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2- ஆம் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஆக. 31, வரும் செப்.1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவியா் சோ்க்கைக்கு இணைய தளம் மூலம் விண்ணப்பித்தவா்களுக்கு பி.எஸ்.சி., கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் பாடப் பிரிவுக்கு ஆக. 31- ஆம் தேதியும், பி.எஸ்.சி. கணிதம் மற்றும் பி.காம் பாடப் பிரிவுக்கு வரும் செப்.1-ஆம் தேதியும், பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு செப். 2-ஆம் தேதியும் 2-ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.

கலந்தாய்வுக்கான மாணவா்கள் தர வரிசைப் பட்டியல் கல்லூரியின் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com