மைனா் பெண் மீண்டும் கடத்தல்: தாய், மகன் மீது வழக்கு
By DIN | Published On : 31st August 2021 11:37 PM | Last Updated : 31st August 2021 11:37 PM | அ+அ அ- |

போடியில் மைனா் பெண்ணை மீண்டும் கடத்திச் சென்ற வழக்கில் தாய், மகன் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
போடி துரைராஜபுரம் காலனி அருகே வசித்து வரும் 15 வயது சிறுமியை, துரைராஜபுரம் காலனியை சோ்ந்த சின்னமாரிமுத்து மகன் சந்தோஷ் என்பவா் காதலித்து வந்துள்ளாா். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் அச்சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளாா்.
இது குறித்து போடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சந்தோஷ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.
சிறையிலிருந்து ஜாமீனில் வந்த சந்தோஷ் மீண்டும் அதே சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளாா். இதற்கு சந்தோஷின் தாயாா் பாண்டியம்மாளும் உடந்தையாக இருந்துள்ளாா். இது குறித்த புகாரின்பேரில், போடி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.