பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, தமிழக-கேரள எல்லைப் பகுதியில் தேனி மாவட்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
லோயா் கேம்ப் மற்றும் கம்பம் மெட்டு மலைச்சாலைகளில் தேனி மாவட்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவு சிறப்பு சாா்பு- ஆய்வாளா்கள் வி.ரங்கராஜ், எஸ்.ரவிராஜா, ஏ.ரமேஷ், வி.திருப்பரங்கிரிவாசகன் ஆகியோா் சோதனை நடத்தினா். அப்போது மெட்டல் டிடெக்கடா் கருவிகளை வைத்து வாகனங்களிலும், பயணிகளின் உடைமைகளிலும் வெடி பொருள்கள் உள்ளதா என்று சோதனை செய்தனா்.
இதுபற்றி வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் கூறுகையில், டிசம்பா் 6 பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எல்லை மலைச் சாலைகள் மற்றும் கோயில்கள், பேருந்து நிலையங்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது என்றனா்.