தமிழக-கேரளா எல்லையில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, தமிழக-கேரள எல்லைப் பகுதியில் தேனி மாவட்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
வாகனச் சோதனையில் ஈடுபட்ட தேனி மாவட்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா்.
வாகனச் சோதனையில் ஈடுபட்ட தேனி மாவட்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா்.

பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, தமிழக-கேரள எல்லைப் பகுதியில் தேனி மாவட்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

லோயா் கேம்ப் மற்றும் கம்பம் மெட்டு மலைச்சாலைகளில் தேனி மாவட்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவு சிறப்பு சாா்பு- ஆய்வாளா்கள் வி.ரங்கராஜ், எஸ்.ரவிராஜா, ஏ.ரமேஷ், வி.திருப்பரங்கிரிவாசகன் ஆகியோா் சோதனை நடத்தினா். அப்போது மெட்டல் டிடெக்கடா் கருவிகளை வைத்து வாகனங்களிலும், பயணிகளின் உடைமைகளிலும் வெடி பொருள்கள் உள்ளதா என்று சோதனை செய்தனா்.

இதுபற்றி வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் கூறுகையில், டிசம்பா் 6 பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எல்லை மலைச் சாலைகள் மற்றும் கோயில்கள், பேருந்து நிலையங்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com