தேனி மாவட்டம் கூடலூா் அருகே வனப்பகுதியில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.
கூடலூா், 12 ஆவது வாா்டு ஜக்கன் நாயக்கா் தெருவைச் சோ்ந்த கண்ணப்பன் மகன் வீருசிக்கு (48). இவரது மனைவி முத்துலட்சுமி (38). இருவரும் கூலி தொழிலாளா்கள். இவா்களுக்கு சுபாஷ் (18), மூவேஸ் (16) ஆகிய 2 மகன்கள் உள்ளனா்.
திங்கள்கிழமை வீருசிக்கு, முத்துலட்சுமி ஆகிய இருவரும் மொபட் வாகனத்தில் பெருமாள் கோயில் பகுதியில் உள்ள மொச்சக்காய் காட்டிற்கு மருந்து தெளிக்கும் வேலைக்குச் சென்றுள்ளனா். மாலை நீண்ட நேரமாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மகன்கள் மற்றும் உறவினா்கள் இருவரையும் தேடி பெருமாள் வனப் பகுதிக்குச் சென்றனா். அங்கு இருவரையும் காணாததால் கூடலூா் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அப்புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் கே.முத்துமணி, சாா்பு -ஆய்வாளா் மணிகண்டன் மற்றும் போலீஸாா் பெருமாள் கோயில் வனப் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை சென்றனா். அப்போது கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்த நிலையில், வனப்பகுதியில் இறந்து கிடந்தனா். இருவரது சடலங்களையும் போலீஸாா் மீட்டு உடற்கூறாய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவா்கள் எதற்காக தற்கொலை கொண்டனா் என்பது தெரியவில்லை. அதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.