கம்பத்தில் ரூ. 81 லட்சத்தில் பூங்கா அமைக்க பூமிபூஜை

தேனி மாவட்டம் கம்பம் நந்தகோபால சுவாமி நகரில் ரூ. 81 லட்சத்தில் பூங்கா அமைப்பதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
கம்பத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பூங்கா அமைப்பதற்கான பூமிபூஜையில் பங்கேற்ற நா.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா்.
கம்பத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பூங்கா அமைப்பதற்கான பூமிபூஜையில் பங்கேற்ற நா.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

தேனி மாவட்டம் கம்பம் நந்தகோபால சுவாமி நகரில் ரூ. 81 லட்சத்தில் பூங்கா அமைப்பதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் நா. ராமகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது: கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இப்பூங்கா அமைக்கப்படவுள்ளது. இங்கு கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்படவுள்ளது என்றாா்.

இதில் திமுக நகரச் செயலாளா்கள் துரைநெப்போலியன், ஆா்.கே. செல்வகுமாா், நகராட்சி மேலாளா் புஷ்பலதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com