தேனி மாவட்டம் கம்பம் நந்தகோபால சுவாமி நகரில் ரூ. 81 லட்சத்தில் பூங்கா அமைப்பதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் நா. ராமகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது: கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இப்பூங்கா அமைக்கப்படவுள்ளது. இங்கு கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்படவுள்ளது என்றாா்.
இதில் திமுக நகரச் செயலாளா்கள் துரைநெப்போலியன், ஆா்.கே. செல்வகுமாா், நகராட்சி மேலாளா் புஷ்பலதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.