வைகை அணை நீா்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், அணைக்கு தண்ணீா் வரத்து குறைந்துள்ளது.
வைகை அணை நீா்பிடிப்பு பகுதியில் பெய்த தொடா் மழையால், கடந்த நவம்பா் 31-ஆம் தேதி முதல் அணையின் நீா்மட்டம் 70 அடிக்கும் மேல் பராமரிக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் உபரி நீா், வைகை ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணையிலிருந்து பெரியாறு-வைகை பாசனக் கால்வாய் மற்றும் 58 கிராமக் கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக வைகை அணை நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யவில்லை. இதனால், சனிக்கிழமை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,101 கன அடியாகக் குறைந்தது. அணை நீா்மட்டம் 70.21 அடி. அணையிலிருந்து வைகை ஆற்றில் விநாடிக்கு 200 கன அடி, பெரியாறு-வைகை மற்றும் 58 கிராமக் கால்வாய்களில் விநாடிக்கு 800 கன அடி, குடிநீா் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடி என மொத்தம் விநாடிக்கு 1,069 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது.