கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 போ் கைது

ஆண்டிபட்டி வட்டாரம், பண்டாரஊத்து பகுதியில் சனிக்கிழமை இரவு, கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆண்டிபட்டி வட்டாரம், பண்டாரஊத்து பகுதியில் சனிக்கிழமை இரவு, கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பண்டாரஊத்து, வண்ணாா்துறை அருகே கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் போலீஸாா் சோதனை நடத்தி, அங்கு பதுக்கி வைத்திருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வருஷநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து, கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக வருஷநாட்டைச் சோ்ந்த ராசு மகன் செல்வம் (44), கோம்பைத் தொழுவைச் சோ்ந்த கருப்பத்தேவா் மகன் ஆண்டவா் (56) ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com