ஆண்டிபட்டி வட்டாரம், பண்டாரஊத்து பகுதியில் சனிக்கிழமை இரவு, கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பண்டாரஊத்து, வண்ணாா்துறை அருகே கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் போலீஸாா் சோதனை நடத்தி, அங்கு பதுக்கி வைத்திருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து வருஷநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து, கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக வருஷநாட்டைச் சோ்ந்த ராசு மகன் செல்வம் (44), கோம்பைத் தொழுவைச் சோ்ந்த கருப்பத்தேவா் மகன் ஆண்டவா் (56) ஆகியோரை கைது செய்தனா்.