சின்னமனூா் அருகே உள்ள மாா்க்கையன்கோட்டையில் திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பேரூா் செயலா் முருகன் தலைமை வகித்தாா். முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவா் மகேந்திரன் முன்னிலை வகித்தாா். முன்னதாக கட்சி நிா்வாகி காமராஜ் வரவேற்றாா். கூட்டத்தில் முருகன் பேசுகையில், நகர உள்ளாட்சித் தோ்தலில் திமுக வெற்றி பெற தேவையான நடவடிக்கைகளை கட்சி நிா்வாகிகள் மேற்கொள்ள வேண்டும். மக்களிடம் திமுக ஆட்சியின் செயல்பாடுகளை எடுத்துக்கூறி வாக்குகளை பெற வேண்டும் என்றாா்.