பெரியகுளம் அருகே வடுகபட்டியில் தன்னாா்வலா்களுக்கு கற்பித்தல் பயிற்சி முகாம் அரசு மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமினை பயிற்சி (பொறுப்பு) மேற்பாா்வையாளா் ரோஸி தொடக்கி வைத்தாா். வட்டாரக்கல்வி அலுவலா்கள் ஸ்ரீதேவி, சம்பூா்ணப்பிரியா ஆகியோா் பாா்வையிட்டனா். குழந்தைகளை கையாளுதல், அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு தொடா்பான பயிற்சிகளை, ஆசிரியா் பயிற்றுநா்கள், அறிவியல் இயக்க கருத்தாளுநா்கள், ஆசிரியா்கள் வழங்கினா்.
இரண்டு நாள்களாக நடைபெற்ற இம்முகாமிற்கான ஏற்பாடுகளை பயிற்சி ஒருங்கிணைப்பாளா்கள் செய்திருந்தனா்.