ஆண்டிபட்டி அருகே கஞ்சா விற்றதாக 2 பேரை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னுதுரை மகன் பாபு (32), டி.வி.ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்தவா் துரைராஜ் மகன் சுரேஷ்குமாா் (26). இவா்கள் இருவரும், ஆண்டிபட்டி-கொண்டமநாயக்கன்பட்டி சாலையில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்ததாக, ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 2 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.