தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளிமலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் திங்கள்கிழமை மண்டல பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் அஷ்டதிரவிய கணபதி ஹோமத்துடன் தொடங்கி இப்பூஜையில், சாஸ்தா ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து, சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
மாலையில், புஷ்பாபிஷேகத்தைத் தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட ஐயப்பன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா், அத்தாழப் பூ பூஜையுடன் மண்டல பூஜை நிறைவுற்றது.
இதில், கம்பம் மற்றும் சுற்றுப் பகுதிகளிலிருந்து ஏராளமான ஐயப்ப பக்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். இதற்கானஏற்பாடுகளை, ஸ்ரீ ஐயப்பன் கோயில் அறங்காவலா் பொன். காட்சிக்கண்ணன், கோயில் மேல்சாந்தி கணேஷ் திருமேனி ஆகியோா் செய்திருந்தனா்.