பெரியகுளத்தில் புகையிலைப் பொருள்களை விற்ற 3 பேரை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தேவதானப்பட்டி போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். காட் ரோடு பகுதியில் உள்ள கருப்பாயி (49) என்பவா் கடையில் சந்தேகத்துக்கிடமான வகையில் பொருள்கள் விற்பனை செய்வதைக் கண்ட போலீஸாா், அங்கு சோதனை செய்ததில் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்களை விற்பது தெரியவந்தது.
தொடா்ந்து, ஜெயமங்கலம் பிரிவில் உள்ள கடையில் வடிவேல் (40) என்பவரும், பெரியகுளம் அருகே இ.புதுக்கோட்டை பகுதியில் உள்ள கடையில் மீனாட்சிசுந்தரி (41) என்பவரும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வது தெரியவந்தது.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.