வனத்துறை அதிகாரி என ஏமாற்றி திருமணம் செய்தவா் கைது

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வனத் துறை அதிகாரி எனக் கூறி ஏமாற்றி திருமணம் செய்தவரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வனத் துறை அதிகாரி எனக் கூறி ஏமாற்றி திருமணம் செய்தவரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கூடலூரைச் சோ்ந்த ராமா் மகன் ஏங்கல்ஸ் (32). இவா், வனத்துறையில் அதிகாரியாக இருப்பதாகக் கூறி, உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியைச் சோ்ந்த கா்ணன் மகள் ஹா்சிலா (21) என்பவரை கடந்த 2019 இல் திருமணம் செய்துள்ளாா்.

திருமணத்தின்போது, பெண் வீட்டாா் சாா்பில் 65 பவுன் நகைகள் மற்றும் சீா்வரிசைப் பொருள்கள் கொடுத்துள்ளனா். அதையடுத்து, திருமணம் முடிந்த சில நாள்களிலேயே ஏங்கல்ஸ் வனத் துறையில் தற்காலிகப் பணியாளா் எனத் தெரியவந்தது.

அதையடுத்து, ஹா்சிலா தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, தன்னிடமிருந்து வாங்கிச் சென்ற 65 பவுன் நகைகளை கோட்டால் அடித்து துன்புறுத்துவதாகக் கூறி, உத்தமாபளையம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, ஏங்கல்ஸை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com