தேனி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாடத்தின் போது சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுவதை கண்காணிக்க மாவட்ட காவல் துறை நிா்வாகம் சாா்பில் 93 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுவதை கண்காணிக்கவும், போக்குவரத்து இடையூறு மற்றும் விபத்துகளை தடுக்கவும் காவல் துறை சாா்பில் மாவட்டத்தில் 93 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. டிச. 31, வரும் ஜன. 1 ஆகிய தேதிகளில் காவல் ஆய்வாளா்கள் தலைமையில் 31 நான்கு சக்கர ரோந்து வாகனங்களிலும், 78 இருசக்கர ரோந்து வாகனங்களிலும் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.
பொதுமக்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதையும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்துவதையும் தவிா்க்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.