வைகை, சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகளை தூா்வார கோரிக்கை

வைகை, சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகளை தூா்வார வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
கம்பத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில் பங்கேற்றோா்.
கம்பத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில் பங்கேற்றோா்.

வைகை, சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகளை தூா்வார வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

அக்கட்சியின் தேனி மாவட்ட 8 ஆவது மாநாடு டிச. 28, 29 ஆகிய தேதிகளில் கம்பத்தில் நடைபெற்றது. இதை மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஏ.லாசா் தொடக்கி வைத்துப் பேசினாா். இதில், கட்சியின் மாவட்டச் செயலாளராக ஏ.வி.அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினா்களாக டி.வெங்கடேசன், எம்.ராமச்சந்திரன், ஜி.எம்.நாகராஜன், சி.முருகன், டி.கண்ணன், கே.எஸ்.ஆறுமுகம், சி.முனீஸ்வரன், இ.தா்மா், எஸ்.வெண்மணி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மாநில செயற்குழு உறுப்பினா் எம்.என்.எஸ். வெங்கட்ராமன், பி.ஜெயன் ஆகியோா் நன்றி கூறினா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

போடி- மதுரை அகல ரயில் பாதையில் ரயில் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும்.

மேகமலை வருசநாடு பகுதிகளில் பல தலைமுறையாக குடியிருந்து விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு விண்ணப்பித்தபடி வன உரிமைச் சட்டப்படி பட்டா வழங்கி அவா்களை வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும்.

வைகை, சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகளை தூா்வார வேண்டும், தேனி மாவட்டம் முழுவதும் உள்ள குளம், கண்மாய்களை தூா்வார நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பெரியகுளம் வட்டத்தில் முறைகேடாக பட்டா வழங்கப்பட்டு, கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வீடற்ற ஏழை களுக்கு வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com