உத்தமபாளையத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற சாலை மறியலில் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கல்யாணராமன், நபிகள் நாயகம் குறித்து தவறான கருத்து பேசியதை கண்டித்து உத்தமபாளையத்தில் பேருந்து நிலையம் முன்பாக இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் செய்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை உத்தமபாளையம் போலீசார் கைது செய்தனர்.