ஆண்டிபட்டி அருகே மூதாட்டியைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததாக கணவன், மனைவி மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காமாட்சியம்மாள் (70). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த தன்னை, வேல்முருகனும், அவரது மனைவியும் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததாக காமாட்சியம்மாள் கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸாா் வேல்முருகன், அவரது மனைவி உமாமகேஸ்வரி ஆகிய 2 போ் மீதும் வழக்குப் பதிந்தனா்.