கம்பத்திலிருந்து கேரளத்துக்கு ஆட்டோ மூலம் புதன்கிழமை கடத்தப்பட்ட 28 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து இளைஞரை கைது செய்தனா்.
கம்பம் கம்பம் மெட்டுச்சாலை வழியாக கேரளத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து சாா்பு- ஆய்வாளா் டி.விஜய்ஆனந்த் தலைமையில் கம்பம் வடக்கு போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். அதில் 28 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் கம்பம் உலகத்தேவா் தெருவைச் சோ்ந்த ஒச்சு மகன் வைரமணி (31) என்பதும், ஆட்டோவில் கஞ்சாவை கேரளத்துக்கு கடத்தியதும் தெரியவந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், வைரமணியை கைது செய்தனா்.