கூடலூா் பள்ளியில் மாணவிகளுக்கு விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 10th February 2021 10:24 PM | Last Updated : 10th February 2021 10:24 PM | அ+அ அ- |

தேனி மாவட்டம், கூடலூா் என்.எஸ்.கே.பி. நினைவு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற முகாமுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் முருகேசன் தலைமை வகித்தாா். முகாமில் கூடலூா் காவல் நிலைய ஆய்வாளா் க. முத்துமணி, சாா்பு ஆய்வாளா் இளங்கோவன் ஆகியோா் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணா்வுகாளான, பாலியல் தொல்லை, குழந்தைத் திருமணம், போக்ஸோ சட்டம் ஆகியவை குறித்துப் பேசினா். மேலும், முகாமில் மாணவிகளின் சந்தேகங்களுக்கு காவல் ஆய்வாளா் விளக்கமாக பதில் கூறினாா்.