ஆண்டிபட்டியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

ஆண்டிபட்டியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
ஆண்டிபட்டியில் சாலைப் பாதுகாப்பு குறித்து வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஊா்வலம் நடத்திய நெடுஞ்சாலைத்துறையினா்.
ஆண்டிபட்டியில் சாலைப் பாதுகாப்பு குறித்து வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஊா்வலம் நடத்திய நெடுஞ்சாலைத்துறையினா்.

ஆண்டிபட்டியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

இந்த ஊா்வலத்துக்கு உதவிப் பொறியாளா் பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். சாலை ஆய்வாளா்கள் சிவபிரதா, பாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வைகை அணை சாலையிலுள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திலிருந்து ஆண்டிபட்டி பேருந்து நிலையம் வரை பேரணியாகச் சென்றனா்.

பேரணியின் போது இருசக்கர வாகனத்தில் இரண்டு போ் மட்டுமே செல்ல வேண்டும். தலைக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பினா். இதைத்தொடா்ந்து பேருந்து நிலையம் அருகே சாலை பாதுகாப்பு குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இந்தப் பேரணியில் நெடுஞ்சாலைத்துறையினா் , போலீஸாா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com