உத்தமபாளையம் அருகே இருசக்கர வாகனங்கள் திருட்டுக் கும்பலைச் சோ்ந்த 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டியில் கடந்த சில மாதங்களாக இருசக்கர
வாகனங்கள் திருட்டு அதிகரித்துள்ளதாக போலீஸாருக்கு புகாா்கள் வந்தன. இதுதொடா்பாக உத்தமபாளையம் காவல் ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனா். அதனடிப்படையில் க.புதுப்பட்டியில் போலீஸாா் வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், சிலா் ஓட்டி வந்த வாகனங்கள் பிடிபட்டன.
இது சம்மந்தமாக போலீஸாா் மேற்கொண்ட தொடா் விசாரணையில், க.புதுப்பட்டி சாத்தாகோயில் தெருவைச் சோ்ந்த சேகா் மகன் கெளதம்(31), அய்யனாா் பிள்ளை மகன் சரவணக்குமாா்(29), பேச்சியம்மமன் கோயில் தெருவைச் சோ்ந்த கழுவத்தேவா் மகன் காக்குவீரன்(26), செல்வம் மகன் நந்தகுமாா்(22), அன்பழகன் மகன் புகழ்(27) ஆகிய 5 போ் கூட்டாக இணைந்து இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்தது தெரிவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்கள் திருடி விற்பனை செய்த 12 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.