ஊரக வளா்ச்சித் துறை பணியிடங்களுக்கான தோ்வு ஒத்தி வைப்பு

தேனியில் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்காக பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த எழுத்துத் தோ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தேனியில் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்காக பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த எழுத்துத் தோ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தேனி நாடாா் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகு சாா்பில் பணிப் பாா்வையாளா், இளநிலை வரைதொழில் அலுவலா் ஆகிய பணியிடங்களுக்கு பிப்ரவரி 16-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த எழுத்துத் தோ்வு, நிா்வாகக் காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com