தேனி மாவட்ட தொழுநோய் மையம் சாா்பில் கம்பம் நேதாஜி ஆதரவற்றோா் இல்ல வளாகத்தில் தொழுநோய் கண்டறியும் முகாம் வெள்ளிக்கிழமை நடந்தது.
முகாமிற்கு மாவட்ட மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் ரூபன்ராஜ் தலைமை வகித்தாா்.
காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவா் சிராஜ்தீன், கம்பம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் மீனாட்சி சுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் ஆதரவற்றோா் இல்ல குழந்தைகள், முதியவா் மற்றும் பொதுமக்களுக்கு தோல் நோய் உள்ளதா என மருத்துவக்குழுவினா் பரிசோதனை செய்தனா். மேலும் தோல் நோய்களுக்கு சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன.