‘திமுகவுக்கு இடி காத்திருக்கிறது’

கருணாநிதி காலத்திலிருந்து விடியலை நோக்கி சென்று கொண்டிருக்கும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு இடி காத்திருக்கிறது என்று வருவாய்த்துறை அமைச்சா் 
மாநில அளவிலான கோ, கோ போட்டியில் முதலிடம் பெற்ற அணிக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகளை வழங்கிய வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத்.
மாநில அளவிலான கோ, கோ போட்டியில் முதலிடம் பெற்ற அணிக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகளை வழங்கிய வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத்.

பெரியகுளம்: கருணாநிதி காலத்திலிருந்து விடியலை நோக்கி சென்று கொண்டிருக்கும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு இடி காத்திருக்கிறது என்று வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி அருகே லட்சுமிபுரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் மாநில அளவிலான கோ,கோ போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பரிசுகளை வழங்கினா்.

பின்னா் விழாவில் அமைச்சா் பேசியதாவது: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகிய இருவரும் தமிழகத்தில் ராமன், லட்சுமணன் போன்று சிறப்பாக ஆட்சி புரிந்து வருகின்றனா். கருணாநிதி காலத்திலிருந்து விடியலை நோக்கி சென்று கொண்டிருக்கும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு இடி காத்திருக்கிறது என்றாா்.

விழாவில், பெரியகுளம் வடக்கு ஒன்றியச் செயலாளா் எம்.செல்லமுத்து மற்றும் அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com