தேனி: லோயா்கேம்பில் செவ்வாய்க்கிழமை (பிப்.23) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சின்னமனூா் மின் வாரிய செயற்பொறியாளா் ரமேஷ்குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.23) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. எனவே, லோயா்கேம்ப், மேல்மணலாா், கீழ்மணலாா், ஆங்கூா்பாளையம், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவித்தாா்.