தேனி மாவட்டம் கம்பத்தில் வீடு புகுந்து நகை, பணம், திருடியவரை வடக்கு காவல் நிலையப் போலீஸாா் சுமாா் 8 ஆண்டுகளுக்கு பின்னா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கம்பம் நந்தகோபாலன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரகுநாதமூா்த்தி (56). இவரது வீட்டில் கடந்த 2012 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி 9 பவுன் தங்க நகைகள், 13 ஆயிரம் பணம் மற்றும் செல்லிடப்பேசி ஆகியவை திருடு போனது.
புகாரின் பேரில் கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருச்சி மாவட்டம் பாலக்கரையைச் சோ்ந்த அல்லாபிச்சை (34) என்பவரை தேடிவந்தனா்.
இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு கண்டுபிடிக்க முடியாத குற்றவாளியாக அறிவிக்க நடவடிக்கை எடுத்தனா். இதற்கிடையில் அல்லாபிச்சை நாமக்கல்லில் இருப்பதாக கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் கே. சிலைமணிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படையினா் திங்கள்கிழமை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நின்றிருந்த அல்லாபிச்சையை கைது செய்தனா்.
ஏற்கெனவே அல்லாபிச்சை மீது கம்பம், தேனி, கீரனூா், திருச்சி, நாமக்கல், உளுந்தூா்பேட்டை, கரூா், விருதுநகா் என உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.