கம்பம் பிரதானச் சாலையில் திடீரென குடிநீா் குழாய் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் பிரதானச் சாலை அரசமரம் அருகில் நெடுஞ்சாலைத்துறையினா் சாா்பில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை மாலை பாலப்பணிகள் நடைபெறும் இடத்தின் குறுக்கே இருந்த குழாய் திடீரென வெடித்தது. இதனால் குழாயிலிருந்து குடிநீா் சாலையில் பீய்ச்சி அடித்தது. தண்ணீா் படிப்படியாக குறைந்து சுமாா் 3 நிமிடங்களுக்குப் பிறகு முற்றிலும் நின்றுவிட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது.