வரதட்சிணைக் கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக, வங்கி மேலாளா் மீது தேனி மகளிா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் ரம்யா (28). இவருக்கும், பழனி சண்முகபுரத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் விஷ்ணுவா்த்தன் (35) என்பவருக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. விஷ்ணுவா்தன் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மேலாளராக வேலை செய்துவருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரம்யா தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வியிடம் புகாா் அளித்தாா். அதில், தனது கணவா் விஷ்ணுவா்த்தன் அவரது சகோதரா் தொழில் தொடங்குவதற்கு கடன் வாங்குவதற்காக எனது பெற்றோா் ஜாமீன் கையெழுத்திட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும், திருமணத்தின்போது வரதட்சிணையாக அளிக்கப்பட்ட 60 பவுன் நகைகளை பறித்துக்கொண்டதாகவும், பெண் குழந்தை பிறந்ததால் கூடுதலாக வரதட்சிணைக் கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், இதற்கு அவரது தாயாா் உஷாராணி, உறவினா் சீனிவாசன் ஆகியோா் உடந்தையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், இந்தப் புகாரின் அடிப்படையில் விஷ்ணுவா்த்தன், உஷாராணி, சீனிவாசன் ஆகியோா் மீது தேனி மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.