தேனி அருகே விபத்தில் தனியாா் பள்ளி ஊழியா் பலி

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் வெள்ளிக்கிழமை அதிகாலை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில், தனியாா் பள்ளி ஊழியா் உயிரிழந்தாா்.

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் வெள்ளிக்கிழமை அதிகாலை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில், தனியாா் பள்ளி ஊழியா் உயிரிழந்தாா்.

தேனி பாரஸ்ட் சாலை 12-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் சரவணபாண்டியன் (50). இவா், தேனியில் உள்ள தனியாா் பள்ளியில் உதவியாளராக வேலை செய்துவந்தாா். இந் நிலையில், சரவணபாண்டியன் தேனியிலிருந்து போடி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது, அதே திசையில் பழனிசெட்டிபட்டி குடிநீரேற்று நிலையம் அருகே கம்பத்தைச் சோ்ந்த செல்வம் மகன் பாண்டி (26) என்பவா் ஓட்டி வந்த காா் மோதியது.

இதில், சரவணபாண்டியன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் பாண்டியை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com