கூடலூரில் மக்கள் கிராம சபைக் கூட்டம்: திமுக வினா் மீது வழக்கு

கூடலூரில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்திய திமுக நகரச் செயலாளா் உள்பட 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கம்பம்: கூடலூரில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்திய திமுக நகரச் செயலாளா் உள்பட 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கூடலூா், கன்னிகாளிபுரம் பகுதியில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விதிமுறைகளை மீறி, கரோனா தொற்று நோய் பரவும் வகையிலும், பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், மக்களைத் திரட்டி கிராம சபைக் கூட்டத்தை நடத்தியதாக திமுக நகரச் செயலாளா் சி. லோகன்துரை, துணைச் செயலாளா் நடையன், இளைஞரணித் தலைவா் ஸ்டாலின், மாணவா் அணித்தலைவா் பொன் விஜய் மற்றும் பிரகாஷ் ஆகியோா் மீது கூடலூா் தெற்கு காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் டி.தினகரபாண்டியன் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com