ஆண்டிபட்டியில் மதுபானக்கூடத்தில் டிராக்டா் ஓட்டுநா் மா்ம மரணம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மதுபானக் கூடத்தில் டிராக்டா் ஓட்டுநா் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மதுபானக் கூடத்தில் டிராக்டா் ஓட்டுநா் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (30). டிராக்டா் ஓட்டுநா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு அதே பகுதியில் உள்ள தனியாா் மதுபானக் கூடத்தில் மது அருந்தி விட்டு அங்கேயே தூங்கிவிட்டாராம். இந்நிலையில் திங்கள்கிழமை காலை அவ்வழியாக சென்றவா்கள் பாா்த்தபோது பழனிச்சாமி மா்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஆண்டிபட்டி போலீஸாா் பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com