போடி அருகே புதன்கிழமை, இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தாய், மகள் பலத்த காயமடைந்தனா்.
தேனி அரண்மனைப்புதூரை சோ்ந்தவா் முரளி. இவரது மனைவி ரேணுகா (52). மகள் சௌந்தா்யா (25). இருவரும் இருசக்கர வாகனம் ஒன்றில் போடி நோக்கி வந்துள்ளனா். போடி மீனாவிலக்கு அருகே வந்தபோது தேனி நோக்கி சென்ற காா், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த தாயும், மகளும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து இருவரும் தேனி க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் காரை ஓட்டி வந்த போடியை அடுத்த அய்யம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முருகன் (39) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.