தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே அங்கன்வாடி மையத்தில் சமத்துவப்பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
அப்பிபட்டி விஸ்வநாதபுரம் அங்கன்வாடி மையத்தில் சமத்துவப்பொங்கல் விழா
நடைபெற்றது. இதில் மையத்தின் பொறுப்பாளா் அனீஸ் பாத்திமா, குழந்தைகள் மற்றும் பெற்றோா்கள் பங்கேற்றனா். அப்போது குழந்தைகளுக்கு தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை குறித்தும், விவசாயிகள் குறித்தும் கதையாக கூறப்பட்டது. அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.