பெரியகுளம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த காா் ஓட்டுநா் திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் வனராஜ் (52). காா் ஓட்டுநரான இவா் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளாா். இந்நிலையில், திங்கள்கிழமை விஷம் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்த அவா், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.