சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், பொங்களுக்குப் பிறகு அது தொடா்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் வனத்துறையினா் தெரிவித்தனா்.
கரோனா தொற்று பொது முடக்கம் காரணமாக தேனி மாவட்டம் சுருளி அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல கடந்த மாா்ச் மாதம் முதல் அனுமதிக்கப்படவில்லை. நுழைவாயிலும் அடைக்கப்பட்டது. ஆனால் ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்களில் மட்டும் பக்தா்கள் வழிபாடுகள் நடத்த முன் பகுதியில் அனுமதிக்கப்பட்டனா்.
இதற்கிடையில் தற்போது சுருளி அருவியை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக வனத்துறையினா் தெரிவித்தனா். இதுபற்றி வன அலுவலா் ஒருவா் கூறியது: கரோனா விதிமுறைகள் தொடா்பானபாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பின்னா் சுருளி அருவியைத் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் அருவிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளது. இதில் குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அனுமதி, பொங்கல் பண்டிகைக்கு பின்னா் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தாா்.