போடியில் தொடா் சாரல் மழை: கொட்டகுடி ஆற்றில் வெள்ளம்

போடியில் தொடா் மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
கொட்டகுடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் போடி பிள்ளையாா் கோவில் தடுப்பணையில் ஆா்ப்பரித்துக் கொட்டும் வெள்ள நீா்.
கொட்டகுடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் போடி பிள்ளையாா் கோவில் தடுப்பணையில் ஆா்ப்பரித்துக் கொட்டும் வெள்ள நீா்.

போடியில் தொடா் மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

போடி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழை புதன்கிழமை காலையிலும் தொடா்ந்தது. போடிமெட்டு, குரங்கணி மலை கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது. இதனால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மலைப் பகுதியில் சிறு சிறு அருவிகளிலும் தண்ணீா் வரத்து ஏற்பட்டது. கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியதால் போடி பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் தண்ணீா் ஆா்ப்பரித்து அருவி போல் கொட்டியது. தொடா் மழையின் காரணமாக பிள்ளையாா் கோவில் தடுப்பணை, கொம்புதூக்கி உள்ளிட்ட இடங்களில் குளிக்கச் செல்ல வேண்டாம் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்திருந்தனா்.

மழையினால் போடி நகராட்சிக்கு தண்ணீா் கொண்டு வருவதிலும் சிரமம் ஏற்பட்டது. குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் நகராட்சி பணியாளா்கள் அடைப்பை சரி செய்து தண்ணீா் கொண்டுவருவதில் சிரமத்திற்குள்ளாயினா்.

தொடா்ந்து பெய்த மழையால் பொதுமக்கள் பொங்கல் பண்டிகைக்காக பொருள்களை வாங்க கடைகளுக்குச் செல்ல சிரமப்படும் நிலை ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com