விவேகானந்தரின் 158 ஆவது ஜயந்தி விழாவையொட்டி, ஆண்டிபட்டியில் அவரது உருவப் படத்துக்கு செவ்வாய்க்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
ஆண்டிபட்டியில் இந்து இளைஞா் முன்னணி அணி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைப்பாளா் மனோஜ்குமாா் தலைமை வகித்தாா். இதில், ஒன்றிய இளைஞரணிச் செயலா் வசந்த், ஒன்றியத் தலைவா் தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்து முன்னணி மாவட்டச் செயலாளா் எஸ்.பி.எம்.செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மொக்கராஜ், நகரச் செயலாளா் பால்பாண்டி, ஒன்றியச் செயலாளா் ஈஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.