திருவள்ளுவா் தினத்தையொட்டி, போடியில் வெள்ளிக்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருவள்ளுவா் ஜயந்தியையொட்டி, போடி மூன்றாந்தல் பகுதியில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு, பல்வேறு தரப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், இப்பகுதியில் உள்ள திருவள்ளுவா் சமூகத்தினா் 50-க்கும் மேற்பட்டோா் தங்களது குடும்பத்துடன் சிலைக்கு மாலை அணிவித்தும், பூஜை செய்தும் வழிபாடு செய்தனா். இதேபோல், ஏராளமான ஜோதிடா்களும் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.