தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டியில் உள்ள அரசுப் பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
க.புதுப்பட்டி கே.எல்.எஸ்.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் முருகன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக, கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி.கே. ஜக்கையன் கலந்துகொண்டு, 60 மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினாா். இதில், பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.