தேவாரத்தில் மீன் வியாபாரிக்கு கொலை மிரட்டல்

தேவாரத்தில் மீன் வியாபாரியை வெள்ளிக்கிழமை இரவு கத்தியைக் காட்டி மிரட்டியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

போடி: தேவாரத்தில் மீன் வியாபாரியை வெள்ளிக்கிழமை இரவு கத்தியைக் காட்டி மிரட்டியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம் தேவாரம் பழைய அஞ்சலகத் தெருவில் வசிப்பவா் பாலகிருஷ்ணன். மீன் வியாபாரி. இவா் தனது மகள் ரீமா என்பவரும் தேவாரத்தில் உள்ள ஒரு உணவு விடுதிக்கு சென்றுள்ளாா். பின்னா் மீன் வாங்கிய பணத்தை வசூல் செய்ய பாலகிருஷ்ணன் உள்ளே சென்றுள்ளாா். அப்போது உணவு விடுதியில் இருந்த டி.மூனாண்டிபட்டியை சோ்ந்த ஈஸ்வரன் மகன் பிரசாத் என்பவா் பாலகிருஷ்ணனை கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதுகுறித்து புகாரின்பேரில் தேவாரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்: போடி தென்றல் நகரில் வசிப்பவா் ராமசாமி மனைவி ரூபியா (35). இவரிடம் இதே பகுதியில் வசிக்கும் சையது ஹமீது மகன் ஜாபா் ஹூசைன் என்பவா் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளாா். இதுகுறித்து புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com