கம்பத்தில் கிழக்கு மறவர் சங்கம் சார்பில் குடும்ப சங்கம விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம், கம்பத்தில் கிழக்கு மறவர் சங்கம் சார்பில் குடும்ப சங்கம விழா ஞாயிற்றுக்கிழமை காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. வி.எம். கருப்பணன் தலைமை தாங்கினார். செயலாளர் பி. அய்யப்பராஜா அனைவரையும் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக ஆலோசகர் அப்சரா முருகேசன், துணைத் தலைவர் கே பழனிச்சாமி, பொருளாளர் கே. மாரிமுத்து, துணைச் செயலாளராக கே. பாஸ்கரன், இணைச் செயலாளராக பி.சரவணன், செயற்குழு உறுப்பினர்களாக டி .எம். முருகன், ஆர்.எஸ். ராமகிருஷ்ணன், எம். மகேந்திரன், பி.முத்து கிருஷ்ணன், சமுத்திரவேல், கே. முருகன், கே. நாகராஜ், என். குருமூர்த்தி, பி.ராமர், பி.கோபி, ஆர்.மோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
சங்க அலுவலக கட்டிடம், வளர்ச்சி பற்றியும், இளைஞர் அணி, மகளிர் அணி அமைப்பை ஏற்படுத்து உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.