தேசிய வாக்காளா் தினத்தையொட்டி தேனியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை வாக்காளா் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலா் க.ரமேஷ் தொடங்கி வைத்தாா். பெரியகுளம் சாா்- ஆட்சியா் சினேகா முன்னிலை வகித்தாா். இதையொட்டி தேனி அரசு மருத்துவக் கல்லூரி செவிலியா் பயிற்சி மாணவிகள் மற்றும் கிராம சுகாதார செவிலியா்களுக்கு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணியில் சிறப்பாக செயலாற்றிய வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.