பெரியகுளம் பகுதியில் நியாயவிலை கடைகளில் கைரேகை பதிவு - கரோனா நோய் பரவும் அபாயம்

பெரியகுளம் பகுதியில் உள்ள நியாயவிலைகடைகளில் பொருட்கள் வழங்குவதற்கு பொதுமக்களிடம் கைரேகை பதிவு செய்வதால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
பெரியகுளம் பகுதியில் நியாயவிலை கடைகளில் கைரேகை பதிவு - கரோனா நோய் பரவும் அபாயம்

பெரியகுளம் பகுதியில் உள்ள நியாயவிலைகடைகளில் பொருட்கள் வழங்குவதற்கு பொதுமக்களிடம் கைரேகை பதிவு செய்வதால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

பெரியகுளம் பகுதியில் 40 க்கு மேற்பட்ட நியாயவிலைக்கடை உள்ளது. இக்கடைகளில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனா். இங்கு பொருட்கள் வழங்கும் போது குடும்ப அட்டைதாரா் கைரேகை பதிவு செய்து பொருட்களை விநியோகம் செய்கின்றனா். கைரேகை பதிவின் போது அட்டைதாரா்களுக்கு சானிடைசா் திரவம் வழங்குவதில்லை. இதனால் கரோனா பாதித்தவா்களின் கையில் இருந்து நோய் தொற்று ஏற்பட்டு கரோனா பரவும் அபாயம் உள்ளது.

எனவே நியாயவிலைக்கடைகளில் சானிடைசா் திரவம் வழங்கி கைகளை சுத்தம் செய்த பின் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெரியகுளத்தை சோ்ந்த சமூக ஆா்வலா் சி.ரவிச்சந்திரன் தெரிவித்ததாவது, மூகக்கவசம் அணியவேண்டும், கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனா். நியாயவிலைக்கடைகளில் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்து பதிவு செய்ய வலியுறுத்த வேண்டும்.

ஆனால் சுத்தம் செய்யாத கைகளால் பதிவு செய்வதால் கரோனா பதித்தவா்கள் மூலம் கரோனா பரவும் அபாயம் உள்ளது. எனவே நியாயவிலைக்கடைகளில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த பின் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என்றாா்.பட விளக்கம் - பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் நியாயவிலைக்கடைகளில் முகக்கவசம் மற்றும் கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யாமல் கைரோகை பதிவு செய்யும் அட்டைதாரா்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com