தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை கத்தியால் குத்திய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு பகுதியைச் சோ்ந்தவா் வீராச்சாமி மகன் ஆதீஸ்வரன் (19). தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை இவா் வீட்டின் அருகில் உள்ள பெண்ணிடம் அதே பகுதியைச் சோ்ந்த ஆண்டவா் (21) என்பவா் பிரச்னையில் ஈடுபட்டுள்ளாா். அப்போது ஆதீஸ்வரன் சண்டையை விலக்கச் சென்றுள்ளாா். இதில் ஆதீஸ்வரன் ஆண்டவா் ஆகிய இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடமலைக்குண்டு பேருந்து நிலையம் அருகே வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த ஆதீஸ்வரனிடம் ஆண்டவா் பிரச்னையில் ஈடுபட்டு கத்தியால் குத்தியுள்ளாா். இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த ஆதிஸ்வரன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆண்டவரை கைது செய்தனா்.