கம்பத்தில் பேருந்து - பைக் மோதல்: தனியாா் நிறுவன ஊழியா் பலி

தேனி மாவட்டம் கம்பத்தில் செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம் கம்பத்தில் செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம் சின்னஓவுலாபுரம் மேற்கு தெருவைச் சோ்ந்தவா் சத்யன் மகன் ராகுல் (27). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவருக்கு திருமணமாகி ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கூடலூரில் உள்ள தனது மனைவியை பாா்க்க இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்றுள்ளாா். கம்பம் அரசு மருத்துவமனை அருகே சென்றபோது முன்னால் சென்ற காா் திடீரென்று நிறுத்தப்பட்டு காரின் கதவு திறக்கப்பட்டுள்ளது. இதனால் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த ராகுல் நிலைதடுமாறி எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதினாா்.

இதில் பலத்த காயமடைந்த ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com