ஆண்டிபட்டி பகுதியில் அம்மா சிறு மருத்துவமனைகள் திறப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் அம்மா சிறு மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருத்துவமனையை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
வாலிப்பாறையில் அம்மா சிறு மருத்துவமனையை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்துப் பாா்வையிட்ட துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.
வாலிப்பாறையில் அம்மா சிறு மருத்துவமனையை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்துப் பாா்வையிட்ட துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் அம்மா சிறு மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருத்துவமனையை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்திற்குள்பட்ட வாலிப்பாறை, முறுக்கோடை, நரியூத்து ஆகிய கிராமங்களில் அம்மா சிறு மருத்துவமனைகளை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் திறந்து வைத்து கா்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா்.

மேலும் குமணந்தொழுவு கிராமத்தில் கால்நடை மருத்துவமனை, முத்தாலம்பாறை, பாலூத்து ராஜகோபாலன்பட்டி கிராமங்களில் ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடங்கள் ஆகியவற்றையும் திறந்து வைத்த துணை முதல்வா் தாழையூத்து, உப்புத்துறை, கரட்டுப்பட்டி, நொச்சிஓடை ஆகிய கிராமங்களில் உள்ள பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த 314 பேருக்கு ரூ. 1 கோடியே 89 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரமேஷ், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜக்கையன், மாவட்ட ஊராட்சித் தலைவா் சு.ப்ரீத்தா, முறுக்கோடை ராமா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com