கரோனாவுக்கு சிறப்பு சாா்பு- ஆய்வாளா் பலி
கம்பம் அருகே சிறப்பு சாா்பு-ஆய்வாளா் ஜெ.அழகேசன் கரோனா தொற்று பாதிப்பால் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம் குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் அழகேசன் (50). சிறப்பு சாா்பு- ஆய்வாளரான இவா், நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணிபுரிந்து வந்தாா். கம்பத்தில் காவலா் குடியிருப்பில், மனைவி பரிமளா (41), மகள் நிகிதா (19), மகன் பாலாஜி (14) ஆகியோருடன் வசித்து வந்தாா்.
ஜூலை 2 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உத்தமபாளையம் அருகே உள்ள கரோனா தனிமை சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாா்.
ஜூலை 8 ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அழகேசன், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
அவரது உடல், சொந்த ஊரான குள்ளப்பகவுண்டன் பட்டியில் காவலா் அணிவகுப்பு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.