போடி அருகே கோயிலில் திருட்டு

போடி அருகே அம்மன் கோயிலில் புதன்கிழமை பணம் மற்றும் பொருள்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

போடி அருகே அம்மன் கோயிலில் புதன்கிழமை பணம் மற்றும் பொருள்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

போடியிலிருந்து முந்தல் செல்லும் சாலையில் உள்ளது மலையாளத்து பகவதியம்மன் கோயில். இக்கோயிலின் பூட்டு புதன்கிழமை உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த குரங்கணி காவல்துறையினா் அங்கு சென்று ஆய்வு நடத்தினா். அப்போது கோபுர கலசம், பித்தளை குத்துவிளக்குகள், ஒலிப்பெருக்கிக் கருவிகள், அம்மன் கழுத்திலிருந்த தங்கத்தாலி, உண்டியலிலிருந்த பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com