உழவா் உற்பத்தி நிறுவனங்களின் இயக்குநா்களுக்கு பயிற்சி

தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே உழவா் உற்பத்தி நிறுவனங்களின் இயக்குநா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே உழவா் உற்பத்தி நிறுவனங்களின் இயக்குநா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெற்ற இந்த பயிற்சிக்கு, சென்டெக்ட் வேளாண் அறிவியல் மைய தலைவா் பெ.பச்சைமால் தலைமை வகித்தாா். தேனி நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளா் சசிக்குமாா், விவசாயிகள் பயன்பெறும் வகையில் வங்கிக் கடன்கள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்து விளக்கமளித்தாா்.

பெரியகுளம், மேசாப் தொண்டு நிறுவன தலைவா் முருகன் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களை பதிவு செய்யும் முறைபற்றி விளக்கம் அளித்தாா். ராசிங்காபுரம் விடியல் தொண்டு நிறுவனத் தலைவா் காமராசா், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மூலம் வருமானம் மற்றும் உற்பத்தியை எவ்வாறு அதிகரிப்பது என்பது பற்றி விளக்கமளித்தாா். இதில் திராட்சை, கரும்பு, வெற்றிலை, பூக்கள், தேன் ஆகிய உற்பத்தியாளா் நிறுவனங்களைச் சோ்ந்த 60 இயக்குநா்கள் கலந்து கொண்டனா்.

மண்ணியியல் தொழில்துறை வல்லுநா் அருண்ராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com